தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த சில மாதங்களுக்கு அதிக மழை பெய்யும்

2 mins read
960d1346-5094-4fc9-ac8f-bf3142361b6b
-

சிங்­கப்­பூ­ரில் அடுத்த சில மாதங்­களில் அதிக மழை பெய்­யக்­கூ­டும் என்று வானிலை ஆய்­வ­கம் முன்­னு­ரைத்­துள்­ளது.

பசி­பிக் பெருங்­க­டல், இந்­தி­யப் பெருங்­க­டல் வட்­டா­ரங்­களில் நில­வும் இரண்டு வானிலை நிகழ்­வு­க­ளால் சிங்­கப்­பூர் ஆகா­ய­வெ­ளி­யில் அதி­க­மான மழை மேகங்­கள் உரு­வா­கும் என்று அது கூறி­யது.

இரண்டு முதல் ஏழு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை பசி­பிக் பெருங்­க­ட­லில் நில­வும் 'லா நினா' நிகழ்­வால் தென்­கி­ழக்­கா­சி­யா­வில் அள­வுக்­க­தி­க­மான மழை­யும் வெள்­ள­மும் ஏற்­ப­டு­வது வழக்­கம்.

இந்­த­முறை 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து 'லா நினா' நீடிக்­கிறது. இத­னால் 2007ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இரண்­டா­வது ஆக அதிக அள­வில் சென்ற ஆண்டு மழை பெய்­த­தாக ஆய்­வ­கம் முன்­னர் தெரி­வித்­தி­ருந்­தது.

மழை அதி­க­மா­கப் பெய்­வ­தற்­கான இரண்­டா­வது கார­ணம் இந்­தி­யப் பெருங்­க­ட­லில் ஏற்­படும் மற்­றொரு வானிலை நிகழ்வு.

'இண்­டி­யன் ஓஷி­யன் டைபோல் நெகட்­டிவ் ஃபேஸ்' எனப்­படும் இந்­நி­கழ்­வால் நில­ந­டுக்­கோட்­டில் இருந்து தென்­கி­ழக்­கா­சியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய வட்­டா­ரங்­கள்­வரை காற்று வலி­மை­பெற்று கடல்­நீ­ரின் வெப்­பம் கூடு­வ­து­டன் அதி­க­மான மழை மேகங்­கள் உரு­வா­கும்.

இத­னால் சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தம் முதல் ஆகஸ்ட் மாதம்­வ­ரை­யில் சர­சரி அள­வுக்­கும் மேலான மழை பெய்­யும் என்று சிங்­கப்­பூர் வானிலை ஆய்­வ­கம் கூறி­யது.

ஆனால் இவ்­விரு வானிலை நிகழ்­வு­க­ளா­லும் சிங்­கப்­பூ­ரின் வெப்­ப­நிலை அதி­கம் பாதிக்­கப்­ப­ட­மாட்­டாது என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

இம்­மா­தத்­தின் எஞ்­சிய நாள்­களில் அன்­றாட வெப்­ப­நிலை 24 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 33 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்று வானிலை ஆய்­வ­கம் முன்­னு­ரைத்­துள்­ளது. சில நாள்­களில் வெப்­ப­நிலை 34 டிகிரி செல்­சி­யசை எட்­டக்­கூ­டும். உலக வெப்­ப­ம­ய­மா­த­லால் பரு­வ­நிலை பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.