200 வெளிநாட்டவர்களிடம் $300,000 மோசடி; சொத்து முகவருக்கு சிறை

2 mins read
9d228845-3dbe-4488-ac73-c93744ae0d02
-

2017ஆம் ஆண்­டில் வாடகை மோச­டி­யில் ஈடு­பட்­ட­தற்­காக ஓராண்­டுக்கு மேல் விசா­ர­ணை­யின் கீழ் இருந்த சொத்து முக­வ­ருக்கு நேற்று சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ராம­நா­தன் சுஜித்­ரன் ஏறக்­கு­றைய 200 வெளி­நாட்­ட­வர்­களிடமிருந்து கிட்­டத்­தட்ட 308,815 வெள்ளி மோசடி செய்­துள்­ளார்.

புரோப்­நெக்ஸ் சொத்து நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த அவர் 2017ஆம் ஆண்­டில் நீக்­கப்­பட்­டார்.

சொத்து விற்­ப­னை­யா­ளர் என்ற தகு­தி­யும் அவ­ரி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்­டது.

அப்­ப­டி­யும் 'டிஎஸ்­ஆர் லாஜிஸ்­டிக்ஸ்' என்ற சொந்த நிறு­வ­னத்­தைத் தொடங்கி, சிங்­கப்­பூ­ர­ரான அவர் தொடர்ந்து பலரை ஏமாற்றி யிருக்­கி­றார்.

தற்­போது 54 வய­தா­கும் ராம­நா­த­னுக்கு நேற்று நான்­கரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தன் மீது சுமத்­தப்­பட்ட 11 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக் கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் சில இடங்­கள் வாட­கைக்கு இருப்­ப­தாக விளம்­ப­ரங்­களை வெளி­யிட்டு அவர் ஏமாற்­று­வார் என நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

வாடகை கேட்டு வரு­ப­வர் களி­டம் அவர் வாடகை ஒப்­பந்­தங்­களை செய்து கொள்­வார்.

வாட­கைக்கு தன்­னால் இடத்­தைக் கொடுக்க முடி­யாது என்­பதை நன்கு அறிந்­தும் அவர் வாடகை ஒப்­பந்­தங்­க­ளைப் போட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் பேசிய அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரிவித்தார்.

வாடகை இடத்தை உறுதி செய்ய வேண்­டு­மா­னால் அதற்கு குறிப்­பிட்ட வைப்­புத் தொகை செலுத்த வேண்­டும் என்று ராம­நா­தன் கூறு­வார்.

ஆனால் வாடகை வீட்டை கொடுப்­ப­தற்­கான தேதி நெருங்­கி­ய­தும் அவர் பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூறி ஒத்திப் போடுவார்.

பின்­னர் ஒரு கட்டத்தில் அந்த வாடகை ஒப்­பந்­தம் ரத்­தா­கி­வி­டும்.

ராம­நா­தன் வைப்­புத் தொகையை வைத்­துக் கொள்­வார்.

ஒரு சம்பவத்தில் 2017 மே மாதத்­தில் ஹவ்­காங்­கில் முழு வீடு வாட­கைக்கு இருப்­ப­தாக அவர் விளம்­ப­ரம் வெளி­யிட்டிருந்­தார்.

அதைப் பார்த்து மூன்று பேர் அவரை அழைத்­த­னர். மூவ­ரும் இந்­திய நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள்.

ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து வைப்­புத் தொகை­யாக அவர் 1,400 வெள்ளி பெற்­றுக் கொண்­டார்.

மூவ­ரும் வாடகை வீட்­டில் குடி­யேற முடி­யா­மல் போனது என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப் பட்­டது.

இதே முறை­யைப் பயன்­ப­டுத்தி ராம­நா­தன் பலரை ஏமாற்றி இருக்­கி­றார்.