சில நோயாளிகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம்

2 mins read
5d24ccc0-0f01-488a-af06-845e3de7c699
எஸ்ஜிஎச்@ஹோம் கண்காணிப்பு நிலையத்தில் காணொளி மூலம் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அவர்களின் உடல்நிலையையும் கண்காணிக்கும் தாதியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நோயா­ளி­களில் சில­ருக்கு இப்போது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக வீட்­டி­லேயே தங்கி சிகிச்சை பெறு­வதற்­கான தெரிவு வழங்­கப்­ப­டு­கிறது.

தோல் தொற்று, சிறு­நீர் வெளி­யே­றும் பாதை­யில் ஏற்­படும் நோய்த்­தொற்று, கொவிட்-19 போன்ற பொது­வான மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் உடைய நோயா­ளி­கள் வீட்­டில் தங்கி சிகிச்சை பெற­லாம்.

மருத்­து­வர்­கள், தாதி­யர், மருந்­தா­ளர்­கள், சிகிச்­சை­யா­ளர்­கள் அடங்­கிய குழு, நோயா­ளி­யின் வீட்­டிற்­குச் சென்று அல்­லது தொலை மருத்­து­வம் மூல­மாக பரா­ம­ரிப்பு வழங்­கும்.

நோயா­ளி­க­ளுக்கு மருத்­து­வ­மனை­யில் அளிக்­கப்­படும் சிகிச்­சை­யைப் போன்றே வீடு­களில் நோயா­ளி­கள் பெறு­வர். நோயா­ளி­யின் உடல்­நிலை மோச­ம­டைந்­தால் அவர் மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­ப­ட­லாம்.

இந்­தப் புதிய பரா­ம­ரிப்பு முறை நேற்று அறி­விக்­கப்­பட்­டது. நோயா­ளிக்­குக் கூடு­தல் வச­தியை ஏற்­படுத்­தித் தரும் இது, மனி­த­வள செயல்­தி­றனை மேம்­ப­டுத்­து­கிறது. மருத்­து­வ­ம­னை­களில் கூடு­தல் படுக்­கைப் பிரி­வு­க­ளைக் கட்ட தேவை­யின்றி படுக்கை ஆற்­ற­லை­யும் இது அதி­க­ரிக்­கும்.

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை மூப்­படைந்­து­வ­ரும் வேளை­யில், இந்­தப் பரா­ம­ரிப்பு முறை முக்­கி­ய­மா­ன­தாக அமை­கிறது.

தேசிய பல்­க­லைக்­க­ழக சுகாதாரக் குழுமம், ஈசூன் ஹெல்த் மருத்துவ இல்லமும் 2019க்கும் 2021க்கும் இடையே இந்­தப் பரா­ம­ரிப்பு முறைக்­கான சாத்­தி­யக்­கூறு ஆய்வை நடத்­தின.

வீட்­டி­லேயே தங்கி சிகிச்சை பெறு­வது குறிப்­பிட்ட நோயா­ளி­களுக்கு ஆக்­க­பூர்­வ­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் இருக்­கும் என்­பதை முன்­னோட்ட சோத­னை­கள் காட்­டின.

இவற்­றின் வெற்­றி­யைத் தொடர்ந்து, சுகா­தார அமைச்­சின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உரு­மாற்ற அலு­வ­ல­கம் இந்­தப் பரா­ம­ரிப்பு முறையை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் தங்கி சிகிச்சை பெறும்­போது கிடைக்­கும் கட்­ட­ணக் கழி­வைப் போன்றே வீட்­டில் சிகிச்சை பெறும்­போ­தும் கிடைக்­கும். வீட்­டில் சிகிச்சை பெறும்­போ­தும் விதிக்­கப்­படும் கட்­ட­ணம், மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறும்­போது விதிக்­கப்­படும் கட்­ட­ணத்துடன் ஒத்து இருக்­கும்.

ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில் அமைக்­கப்­பட்­டுள்ள இதே­போன்ற மருத்­து­வப் பரா­ம­ரிப்பு சிகிச்­சை­கள், மருத்­து­வ­மனை சிகிச்­சைக்கு ஈடான விளைவு­க­ளைக் காட்­டி­யுள்­ளன என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

வீட்­டில் குண­ம­டை­யும் நோயா­ளி­கள் நன்கு உறங்­கு­வ­தா­க­வும் சாப்­பி­டு­வ­தா­க­வும் கூடு­த­லாக நடப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. அவர்­கள் விரை­வில் குணம் அடை­வதாக­வும் கரு­தப்­ப­டு­கிறது.