இணையத் தாக்குதலுக்கு எதிரான பாவனைப் பயிற்சி

1 mins read
6bd26460-df68-4b0e-b885-f5ce0b0d09d2
-

இணை­யத் தாக்­கு­தல்­கள் சிங்­கப்­பூ­ரின் நீர் விநி­யோ­கத்தைப் பாதித்து, மின்­த­டையை ஏற்­ப­டுத்­த­க்கூடும். இத்­த­கைய சூழ­லைத் தடுக்க, கடந்த இரண்டு நாட்­களாக நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பாவ­னைப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டு உள்ளனர்.

செவ்­வாய், புதன்­கி­ழ­மை­களில், சிங்­டெல், எஸ்­எம்­ஆர்டி, செம்ப்­கார்ப், எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் போன்ற 16 நிறு­வ­னங்­க­ளின் 55 பணி­யா­ளர்­கள் இதில் கலந்து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் மின்­னி­லக்க, புல­னாய்­வுச் சேவை­யின் முதல் இணை­யப் பாது­காப்பு பயிற்­சி­யில் நீர் மற்­றும் மின் உற்­பத்தி நிலை­யங்­கள் மீதான பாவ­னைத் தாக்­கு­தலை அடை­யா­ளம் கண்டு அவற்­றைத் தீர்க்க இவர்­கள் முயன்­ற­னர்.