தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் சக மாணவரைக் கொன்ற இளையர் இளையர் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைப்பு

2 mins read
fa40ab34-5224-47a2-868d-a84a582abefe
-

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் தன் சக­ மா­ண­வ­ரைக் கொன்­ற­தா­கக் கூறப்­படும் இளை­யர் மீதான கொலைக் குற்­றச்­சாட்டு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

அது நோக்­க­மற்ற மர­ணம் விளை­வித்­தல் குற்­றச்­சாட்­டாக நேற்று மாற்­றப்­பட்­டது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இளை­ய­ருக்­குத் தற்­போது 18 வயது ஆகிறது. 2021இல் அச்­சம்­ப­வம் நடந்­த­போது அவ­ருக்கு 16 வயது என்­ப­தால் அவ­ரது பெயரை வெளி­யிட முடி­யாது.

18 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­க­ளுக்கு சிறு­வர், இளை­யர் சட்­டம் பாது­காப்­ப­ளிக்­கிறது.

பூன் லே அவென்­யூ­வில் அமைந்­துள்ள ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் உள்ள ஒரு கழி­வ­றை­யில் 2021ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, காலை 11.16 மணிக்­கும் 11.44 மணிக்­கும் இடையே, 13 வயது சிறு­வ­னின் மர­ணத்தை அந்த இளை­யர் விளை­வித்­தார் என்று கூறப்­பட்­டது.

சிறு­வ­னின் கழுத்து, தலை, உடல் ஆகி­ய­வற்றை அவர் பல­முறை கோட­ரி­யால் வெட்­டி­னார் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

சிறு­வ­னின் மர­ணத்தை விளை­விக்க வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் அவர் அவ்­வாறு செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இரு­வ­ருக்­கும் ஒரு­வரை ஒரு­வர் தெரி­யாது என்று காவல் துறை­யின் விசா­ர­ணை­யின் மூலம் தெரி­ய­வந்­தது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இளை­யரை அச்­சம்­ப­வத்­துக்­குப் பிறகு கழி­வ­றை­யின் வெளியே பல மாண­வர்­கள் கண்­ட­னர்.

மாண­வர்­கள் தங்­கள் வகுப்­பு அறை­க­ளுக்­குள் சென்று, கத­வு­ களைப் பூட்டி, வகுப்­பா­சி­ரி­யரை உத­விக்கு அழைக்­கும் 'ஓடு-மறைந்­து­கொள்-கூறு' எனும் அவ­ச­ர­நிலை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இளை­யர் 2019ல் தற்­கொ­லைக்கு முயன்­றார் என்­றும் அவர் மன­ந­லக் கழ­கத்­தில் பரி­சோ­திக்­கப்­பட்­டார் என்­றும் நீதி­மன்ற விசா­ர­ணை­யில் முன்னர் தெரி­விக்­கப்­பட்­டது.

அச்­சம்­ப­வத்­துக்­குப் பின்­னர் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்ள இளை­யர், தனி­யார் மாண­வ­ராக சாதா­ரண நிலைத் தேர்வு எ­ழு­தி­னார். இந்த வழக்கு அடுத்து ஏப்­ரல் 6அம் தேதி விசா­ர­ணைக்கு வரும்.