சிங்கப்பூர் மாணவர்கள் உட்பட 95,000 பேர் வழக்கு

2 mins read
7f20fcbc-13a2-42c3-a58b-4828fd5e6bba
-

தொற்றுநோய் காலத்தில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் கல்வி வசதிகள் முடக்கப்பட்டன

கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் பிரிட்­டிஷ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்த மாண­வர்­கள் தங்­க­ளு­டைய படிப்­புக்கு பல்­வேறு வகை­யில் இடை­யூறு ஏற்­பட்­ட­தா­கக் கூறி இழப்­பீடு கேட்டு வழக்­குத் தொடுத்­துள்­ள­னர்.

ஏறக்­கு­றைய 95,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் தொடுத்­துள்ள இந்த வழக்­கில் சிங்­கப்­பூர் மாண­வர்­களும் இணைந்­துள்­ள­னர்.

கற்­றல் மற்­றும் கல்வி தொடர்­பான வச­தி­க­ளைப் பெற முடி­யா­த­தால் பல ஆயி­ரக்­க­ணக்­கான டாலர் இழப்­பீ­டா­கக் கிடைக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் மாண­வர்­களில் ஒரு­வ­ரான டேங் லிங்ஸி, தொற்று­நோ­யால் வகுப்­பு­க­ளுக்­குச் செல்ல முடி­ய­வில்லை என்­றும் கல்­வி­யின் அடிப்­படை வச­தி­க­ளைப் பெற முடி­ய­வில்லை என்­றும் கூறி­யுள்­ளார்.

கடந்த 2018ஆம் ஆண்­டில் 25 வயது டேங், ஆக்ஸ்­ஃபர்ட் பல்­கலைக்­க­ழ­கத்­தில் சேர்ந்­தார். தான் தேர்ந்­தெ­டுத்த பொறி­யி­யல் பிரி­வில் உல­கத் தரம் வாய்ந்த கல்­வி­யைப் பெற முடி­யும் என்று அவர் நம்­பி­னார்.

நான்கு ஆண்டு படிப்­புக்கு அவர் ஆண்­டுக்கு 33,400 பவுண்ட் கட்­ட­ண­மா­கச் செலுத்­தி­னார். அதா­வது படிப்­புக்­கான மொத்த கட்­ட­ணம் 218,000 சிங்­கப்­பூர் வெள்­ளி­யா­கும்.

தொற்­று­நோய் உச்­சக்­கட்­டத்­தில் இருந்­த­போது பல்­க­லைக்­க­ழ­கங்­கள் கல்வி வச­தி­களை முடக்­கின. இத­னால் மாண­வர்­கள் பெற வேண்­டிய கல்­வி­யின் தரம் பாதிக்­கப்­பட்­டது என்று திரு டேங் தெரி­வித்­தார். தற்­போது அவர் ஆக்ஸ்­ஃபர்­டில் எரி­சக்தி சந்­தைத் துறை­யில் பகுப்­பாய்­வா­ள­ராகப் பணி­யாற்றி வரு­கி­றார்.

"சில ரசா­ய­னம் தொடர்­பான சோத­னை­களை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வெளியே மாண­வர்­கள் மேற்­கொள்ள முடி­ய­வில்லை. அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் போன்ற பாடங்­க­ளைப் படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு நியா­ய­மான கல்விச் சூழல் வழங்­கப்­ப­ட­வில்லை," என்­றும் அவர் சொன்­னார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக பல்­வேறு இடை­யூ­று­க­ளு­டன் 2022ஆம் ஆண்­டில் பட்­ட­தா­ரி­யான திரு டேங், சோத­னைச் சாலை­யில் சோத­னை­களை முடித்­த­து­போல நடிக்க வேண்­டி­யி­ருந்­தது என்­றார்.

சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளி­டம் பிர­ப­ல­மான யூனி­வர்­சிட்டி காலேஜ் லண்­டன் (யுசி­எல்), யூனி­வர்­சிட்டி ஆஃப் பிரிஸ்­டால், யூனி­வர்­சிட்டி ஆஃப் பர்­மிங்ஹம் ஆகி­யவை உட்­பட குறைந்­தது 18 பிரிட்­டிஷ் பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு எதி­ராக 95,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் வழக்­குத் தொடுத்­துள்­ள­னர்.

பிரிட்­ட­னில் செயல்­படும் ஹார்­கஸ் பார்க்­கர், அசர்­சன் ஆகிய இரண்டு சட்ட நிறு­வ­னங்­கள் மாண­வர்­க­ளைப் பிர­தி­நி­திக்­கின்­றன. வழக்­கில் வெற்றி பெற்­றால் கிடைக்­கும் இழப்­பீட்­டில் 35 விழுக்­காட்டை இந்த இரு சட்ட நிறு­வ­னங்­களும் எடுத்­துக்­கொள்­ளும்.

இந்த வழக்­கில் பெயர் குறிப்­பி­டாத 3ஆம் தரப்பு ஒன்­றும் சேர்ந்­துள்­ளது. இது, மாண­வர்­ க­ளின் கோரிக்­கை­க­ளுக்­காக இணை­யத்தளம் ஒன்றை அமைத்­துள்­ளது.