1,000 'ஹைபிரிட்' வாகனங்களை வாங்க கம்ஃபர்ட்டெல்குரோ திட்டம்

2 mins read
c47cf6dc-e77a-4a6c-8926-ab9da5f29467
-

கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­னம் டீசல் எண்­ணெய்­யைப் பயன்­ப­டுத்­தும் வழக்­கத்­தி­லி­ருந்து அக­லும் முயற்­சி­யில் புதி­தாக 1,000 'ஹைபி­ரிட்' எனப்­படும் பெட்­ரோல்-மின்­சார வாக­னங்­களை வாங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய வழி­களை நிறு­வ­னம் தொடர்ந்து நாடும் ஒரு திட்­ட­மாக இது அமைந்­துள்­ளது.

'கம்­ஃபர்ட்', 'சிட்­டி­கேப்' டாக்­சி­களை இயக்­கி­வ­ரும் நிறு­வ­னம், கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று 500 புதிய 'ஹைபி­ரிட்' டாக்­சி­க­ளின் விநி­யோ­கத்­துக்­கான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்தது.

இந்த டாக்­சி­கள் நவம்­பர் 1ஆம் தேதி முதல் விநி­யோ­கிக்­கப்­பட்டு பயன்­பாட்­டுக்­கும் தயா­ராக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க இறுதி நாள் மே 12. மேலும் 500 'ஹைபி­ரிட்' டாக்­சி­க­ளின் விநி­யோ­கத்தை 2025ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­திற்­குள் பெற்­றுக்­கொள்­ளும் தெரி­வை­யும் இந்தத் திட்டம் வழங்­கு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

இதன்­படி மொத்­தம் 1,000 'ஹைபி­ரிட்' டாக்­சி­களை நிறு­வ­னம் கைப்­பற்­ற­லாம். இது கம்­ஃபர்ட்­டெல்­கு­ரோ­வின் தற்­போ­தைய 8,700 வாக­னங்­களில் ஏறத்­தாழ 11 விழுக்­கா­டா­கும்.

2024ஆம் ஆண்­டோடு டீசல் எண்­ணெய்­யில் இயங்­கி­வ­ரும் தன் 'ஹியுன்டே ஐ40' டாக்­சி­கள் செயல்­படும் காலம் முடி­வ­டைய உள்­ளது என்­றும் அவற்­றுக்­குப் பதி­லாக நிறு­வ­னத்­தின் இந்­தப் புதிய 'ஹைபி­ரிட்' வாக­னங்­கள் செயல்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. பொது­வாக, டீசல் எண்­ணெய் டாக்­சி­களும் 'ஹைபி­ரிட்' டாக்­சி­களும் எட்டு ஆண்­டு­கள் வரை இயங்­க­லாம். மின்­சார டாக்­சி­கள் பத்­தாண்­டு­கள் வரை இயங்­க­லாம்.

கம்­ஃபர்ட்­டெல்­கு­ரோ­வின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் இயங்­கி­வ­ரும் 'ஹியுன்டே ஐ40', நிறு­வ­னத்­தின் ஆகப் பழைய வாகன வகை­யா­கும்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக தன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் நோக்­கில் 'ஹைபி­ரிட்' டாக்­சி­களை மொத்­த­மாக கம்­ஃபர்ட்­டெல்­குரோ வாங்கி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் டாக்சி துறை­யில் பெரும்­பா­லான டாக்­சி­கள் 'ஹைபி­ரிட்' வகையைச் சார்ந்­தவை என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் ஆவ­ணங்­கள் தெரி­வித்­துள்­ளன.

மின்­னூட்டு மையங்­கள் கிடைப்­பது குறித்­தும் வாக­னங்­க­ளுக்கு மின்­னூட்­டும் நேரம் குறித்­தும் டாக்சி ஓட்­டு­நர்­கள் கவலை தெரி­வித்­ததை அடுத்து மின்­சா­ரத்­தில் முழு­மை­யாக இயங்­கும் வாக­னங்­க­ளைக் கைப்­பற்­றும் நிறு­வ­னத்­தின் முயற்சி மெது­வ­டைந்­தது. இந்­நி­லை­யில் புதிய 'ஹைபி­ரிட்' டாக்­சி­க­ளின் பக்­கம் அது தன் கவ­னத்­தைத் தற்­போது திருப்­பி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் பாதி எண்­ணிக்­கை­யி­லான டாக்­சி­கள் 2030ஆம் ஆண்­டுக்­குள் மின்­சார வாக­னங்­க­ளாக இருக்­கும் என்று முன்­ன­தாக டாக்சி துறை கடப்­பாடு தெரி­வித்­தி­ருந்­தது.