துன்புறுத்தலைத் தடுக்க மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சி

2 mins read
863c49da-aaf9-41f0-927b-6dca6c339219
-

மருத்­து­வ­ம­னை­களில் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­வ­தில் இருந்து தற்­காத்­துக்­கொள்­வது குறித்து மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

டான் டோக் செங் மருத்­து­வ­மனை தனது முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளான தாதி­யர் மற்­றும் நோயாளி சேவைப் பிரிவு உத­வி­யா­ளர்­க­ளைத் துன்­பு­றுத்­த­லில் இருந்து பாதுகாக்க தற்­காப்­புக் கலை கற்­றுத்­த­ரும் வகுப்பை நடத்தி வரு­கிறது.

மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­கள் பல­வி­தங்­களில் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளா­வது குறித்து முத்­த­ர­ப்புப் பணிக்­குழு ஒன்று ஆய்வு மேற்­கொண்­டது.

கிட்­டத்­தட்ட 3,000 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களும் பொது­மக்­களில் 1,500 பேரும் பங்­கேற்ற அந்த ஆய்­வில், மூன்­றில் இரு­வருக்கு மேற்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் கடந்த வாரம் துன்­பு­றுத்­தப்­பட்­டது அல்­லது தொல்­லைக்கு ஆளா­னது தெரி­ய­வந்­தது.

அவர்­களில் பாதிப்­பேர் வாரத்­தில் குறைந்­த­பட்­சம் ஒரு­மு­றை­யா­வது துன்­பு­றுத்­தலை எதிர்­கொண்­ட­தை­யும் ஆய்வு கண்­ட­றிந்­தது.

பொது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் துன்­பு­றுத்­த­லுக்கு முடிவு­கட்­டும் வித­மாக கொள்கை ஒன்றை சுகா­தார அமைச்சு வகுத்து வரு­கிறது. கொள்­கை­யில் இடம்­பெ­ற­வேண்­டிய விவ­ரங்­களை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை அமைப்­பு­கள் இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யில் வழங்க உள்­ளன.

இதற்கு முன்­னர், தனது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் உடல் ரீதி­யா­க­வும் வார்த்­தை­க­ளா­லும் துன்­பு­றுத்­தப்­படும் போக்கு அதி­க­ரிப்­ப­தைக் கவ­னித்த டான் டோக் செங் மருத்­து­வ­மனை, 2017ஆம் ஆண்டு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தும் செயல்­க­ளுக்கு எதி­ரான வேலை­யி­டப் பாது­காப்­புத் திட்­டம் ஒன்றை அறி­மு­கம் செய்­தது.

அதன் ஒரு பகு­தி­யாக, 2019ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட 100 பேருக்­குத் தற்­காப்­புத் திறன் நுட்­பங்­கள் கற்­றுத் தரப்­பட்­டன. அவர்­கள் பின்­னர் அந்த திறன்­களை 3,000 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குச் சொல்­லித் தந்­த­னர்.

வன்­மு­றையை அடை­யா­ளம் கண்டு அதற்­கான சூழ­லைத் தவிர்ப்­பது எப்­படி என்­பது உள்­ளிட்ட 8 தற்­காப்­புப் பாடத்திட்­டங்­கள் அந்­தத் திட்­டத்­தில் உள்­ளன.