சிறார்கள் இடையே தொழுநோய் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை ஆய்வில் உறுதி

1 mins read
834488c8-976d-4474-b2a6-02d95b5b1f0a
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 515 புதிய தொழுநோ​யாளி​கள் கண்​டறியப்​பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. - படம்: தி இந்து

சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் தொழுநோ​யால் பாதிக்​கப்​படும் குழந்​தைகளின் விகிதம் அதி​ரித்துள்ளது. இது மாநில பொது சுகா​தா​ரத்​துறை மேற்கொண்ட ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 2021 முதல் 2025 வரை சென்னை நகர்ப்​புறப் பகு​தி​களில் புதி​தாகக் கண்​டறியப்​பட்ட தொழுநோய் பாதிப்​பு​கள் குறித்த ஆய்​வை தமிழக பொது சுகா​தா​ரத்​துறை மேற்கொண்டது. இதற்கான குழுவில் மூன்று மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆய்வின்போது, தமிழகத்​தில் சராசரி தொழுநோய் பாதிப்பு விகிதத்​தை​விட, சென்னை​யில் குழந்​தைகளுக்கு ஏற்​படும் பாதிப்பு விகிதம் அதி​க​மாக இருப்பது உறுதியானது.

வயது, பாலினம், தொழுநோ​யின் வகை-குறைபாடு ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்​தப்​பட்​டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்​சாலைகள் நிறைந்த பகு​தி​களி​லும் மாவட்ட எல்லைப் பகு​தி​களி​லும் மிகுந்த கவனம் செலுத்​தப்​பட்​டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 515 புதிய தொழுநோ​யாளி​கள் கண்​டறியப்​பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. 2020-21ல் லட்​சத்​தில் 1.0ஆக இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-25ல் 1.3%ஆக உயர்ந்​துள்​ளதை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

புலம் ​பெயர்ந்​தவர்​கள் மூலம் இத்தகைய தாக்​கம் ஏற்​பட்​டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தொழிற்​சாலைகள், மாவட்ட எல்லைப் பகு​தி​களில் தொழுநோய் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்