ஊட்டி: ஊட்டி ஆணையர் தனது காரில் 11.70 லட்ச ரூபாய் எடுத்து சென்ற போது லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனையில் பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆய்வாளராக ஜஹாங்கீர் பாஷா கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமை இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11.70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரிமிளா தேவி, மற்றும் காவலர் ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.