‘செல்ஃபி’ எடுக்க முயற்சி செய்தவரின் கண்ணைக் கொத்திய மயில்; பார்வை பறிபோகும் அச்சத்தில் ஆடவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ராமச்சந்திராரெட்டி, 65.

இவரது வீட்டின் அருகே, நாள்தோறும், இரை தேடி ஆண் மயில் ஒன்று வந்து சென்றது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி, பாலாஜி, 33. நேற்று முன்தினம் மதிய வேளையில் அங்கு வந்த மயிலின் அருகே சென்று, தமது கைபேசியில் மயிலுடன் சேர்ந்து ‘செல்ஃபி’ எடுக்க முயற்சிசெய்தார்.

அப்போது, மயில் திடீரென பாலாஜியின் இடது கண்ணை கொத்தியது.

இதில் காயமடைந்த அவர், ஓசூர் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரது இடது கண்ணில் பார்வை கிடைப்பது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அந்த மயிலை நேற்று காலை பொதுமக்கள் பிடித்தனர்.

இதையறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மயிலை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!