திரு.வி.க.நகர்: வீட்டுக்குள் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தும் அதைப் பயன்படுத்தும் வழி தெரியாமல் சாலையோரம் தவித்து வந்த இரு மூதாட்டிகளைக் கண்டு அப்பகுதி மக்கள் வியந்தனர்.
போலிசார் மூதாட்டிகளின் குடிசை வீட்டை சுத்தம் செய்து, அவர்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நகை, பணத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, ஓட்டேரியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் சகோதரிகளான ராஜேஸ்வரி, 65, விஜய லட்சுமி, 60, பிரபாவதி, 57, ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி, அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வந்தனர்.
சகோதரிகள் மூவரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இறந்துபோன பிரபாவதியை மீட்டு போலிசார் அடக்கம் செய்தனர். இந்நிலையில், ஆதரவற்ற நிலையில் மற்ற இரு சகோதரிகள் சாலையோரம் தங்கி வந்தனர்.
அவர்களிடம் போலிசார் விசாரித்தபோது, “வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை,” என்று மூதாட்டிகள் கூறியதால் போலிசார் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
அவர்களது வீட்டுக்குள் குப்பை கள் குவியல் குவியலாக மூட்டை கள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றைப் போலிசார் சுத்தம் செய்தபோது, அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும் பிளாஸ்டிக் குடங்கள், பைகளில் சில்லரைகள் குவிந்து கிடந்ததைப் பார்த்து போலிசார் அதிர்ந்தனர்.
அவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.2 லட்சத்துக்கும் அதி கமாகவே காசு, பணம் இருந்தது. மேலும் செல்லாத ரூபாய் நோட்டுகளான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் ரூ.40 ஆயிரம் வரை இருந்துள்ளன. அத்துடன் 7 பவுன் நகைகளும் இருந்தன.