4.15 கிலோ எடையுள்ள தங்க மாத்திரைகளை விழுங்கி, சென்னைக்கு கடத்திய எண்மர் கைது

துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த ஏர்இந்தியா சிறப்பு விமானத்தில் பயணம் செய்த 8 பேர் 4.15 கிலோ எடையிலான தங்கத்தைக் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் 'எக்ஸ்ரே' படம் எடுத்துப் பார்த்ததில் அவர்கள் தங்க மாத்திரை உருண்டைகளை விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் ‘இனிமா’ கொடுத்து அவர்கள் விழுங்கியிருந்த 161 மாத்திரைகள் எடுக்கப்பட்டன. 4.15 கிலோ தங்க மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.2.17 கோடி. தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருச்சியைச் சேர்ந்த கனகவள்ளி, நிஷாந்தி, கலா, பாத்திமா, புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ், ஜெகதீஷ், கபர்கான், ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஹக்கீம் ஆகிய அந்த 8 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனைத்துலக தங்கம் கடத்தும் கும்பல் வழங்கிய குறைந்த அளவு பணத்திற்காக தங்க மாத்திரைகளைக் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!