இன்று முதல் மாற்றுத்திறனாளி, திருநங்கைக்கு இலவச பயணச்சீட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை

2 mins read
15f5220b-4818-4f61-b5ce-58f1e3c4a9b8
-

சென்னை: சென்­னை­யில் 42 நாட்­க­ளுக்கு பிறகு மாந­க­ரப் பேருந்­து­கள், மெட்ரோ ரயில்­கள் 50% பய­ணி­க­ளு­டன் இயக்­கப்­பட்­டன. மின்­சார ரயில்­க­ளி­லும் கூட்­டம் காணப் பட்டது. வாட­கை கார்­கள், ஆட்­டோக்­களும் சாலைகளில் அதி­க­ள­வில் விரைந்­தன.

அனைத்து சாலை­களும் போக்கு­வ­ரத்து நெரி­ச­லு­டன் காணப்­பட்ட நிலை­யில், சென்­னை­யும் அத­னைச் சுற்­றி­யுள்ள மாவட்­டங்­களும் நீண்ட நாள்­க­ளுக்­குப் பின்னா் இயல்புநிலைக்­குத் திரும்­பியதால் மக்­கள் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் கொரோனா இரண்­டா­வது அலை ஒரு கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்­துள்ள நிலை­யில், கூடு­தல் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

மாநில அர­சின் உத்­த­ர­வின்­படி 50% பய­ணி­கள் மட்­டுமே பேருந்­து­கள், மெட்ரோ ரயிலில் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

எனி­னும், ஒரு சில பேருந்­து­களில் பய­ணி­கள் நெருக்கி உட்­கார்ந்து பய­ணம் செய்­ததை­யும் காணமுடிந்­தது.

ரயில்­களில் நின்­று­கொண்டு யாரும் பய­ணிக்­கக்­கூ­டாது என்ற அறிவிப்பும் ஒலி­பெ­ருக்கி மூலம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருந்தது.

அரசு அலு­வ­ல­கங்­கள் 100% ஊழி­யா்­க­ளு­ட­னும் தனியாா் நிறு­வனங்­கள் 50% ஊழி­யா்­க­ளு­ட­னும் செயல்­பட்­டன. இந்த நிறு­வ­னங்­க­ளைச் ேசர்ந்த ஊழி­யர்­கள் நீண்ட நாள்­க­ளுக்­குப் பிறகு வேலைக்­குத் திரும்­பி­ய­தால் ரயில்­கள், பேருந்­து­களில் கூட்­டம் அதிகமாக இருந்தது.

பய­ணி­கள் நெரி­சலின்றி பய­ணம் செய்­யும் வகை­யில் 500க்கும் மேலான மின்­சார ரயில் சேவை­களும் இயக்­கப்­பட்­டன.

இந்நிலையில், பொதுப் போக்கு ­வ­ரத்து தொடங்­கிய முதல் நாளி­லேயே பூந்­த­மல்­லி­யில் மாந­க­ரப் பேருந்து ஒன்று தடுப்­புச் சுவ­ரில் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. இந்த சம்­ப­வத்­தில் ஓட்­டு­நர் உள்­பட ஐவர் காயம் அடைந்­த­னர்.

இதற்கிடையே, செய்­தி­யா­ளா்­களி­டம் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ­கண்­ணப்­பன் கூறியபோது, "சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், திரு­வள்ளூா் ஆகிய மாவட்­டங்­க­ளுக்­கி­டையே மாந­க­ரப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் 1,792 பேருந்­து­கள் இயக்­கப்­படு­கின்­றன. விழுப்­பு­ரம் அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் சாா்பில் 750 பேருந்­து­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

"பெண்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், அவா்க­ளின் உத­வி­யா­ளா்­கள், திரு­நங்கைகள் ஆகியோர் நக­ரப் பேருந்­து­களில் இல­வ­ச­மா­கப் பய­ணம் செய்ய முதல்­வர் அனுமதி வழங்கியுள்ளாா். அத­ன­டிப்­ப­டை­யில், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், அவா்க­ளின் உத­வி­யா­ளா்­கள், திரு­நங்கை களுக்கு இல­வசப் பய­ணச்சீட்டு இன்று (ஜூன் 23) முதல் வழங்­கப்­படுகிறது," எனத் தெரி­வித்தாா்.