தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் பலி

1 mins read
c13efb4f-4a7a-4458-b3a5-01c7827b6ee3
-

சென்னை: தமிழ்­நாட்­டில் இருந்து கைநி­றைய சம்­பா­திக்­கும் ஆசை­யுடன் வெளி­நாட்­டுக்­குச் சென்­ற­வர்­களில் கடந்த மூன்று ஆண்­டு­களில் மட்­டும் 200 தமி­ழர்­கள் உயி­ரி­ழந்­துள்­ளதாக நியூஸ் 18 ஊடகம் குறிப்பிட்டுள்­ளது.

இது­கு­றித்து, வெளி­நாடு வாழ் தமி­ழர்­கள் நல ஆணை­ய­கம் வெளி­யிட்­டுள்­ள அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2019 வரை­யி­லான மூன்று ஆண்­டு­களில் வெளி­நாட்­டுக்­குச் சென்ற 200 தமி­ழர்­க­ளின் உடல்­கள் தமி­ழ­கம் வந்­த­டைந்துள்ள தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2016-17ல் 48 உடல்­களும் 2017-18ல் 75 உடல்­களும் 2018-19ல் 77 உடல்­களும் தமி­ழ­கம் கொண்டு­ வ­ரப்­பட்­ட­தாக விவ­ரம் கூறுகிறது.

பணிக்குச் செல்லும் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முக வரி, தொடர்பு எண்ணை வெளிநாடு செல்பவர்கள் தெரிந்துகொள்வது அவசியம் என்று ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளு­டன் இந்­திய அரசு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொண்டு, அதன்மூலம் தொழி­லா­ளர்­க­ளின் பாதுகாப்பை உறுதி செய்­ய­வேண்­டும் என்று வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் பேரா­சி­ரி­யர் பெர்­னார்ட் டி சாமி வலி­யு­றுத்தி உள்­ளார்.