பருவமழை தீவிரம்: அனைத்து மாவட்டங்களிலும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு; கர்ப்பிணி உட்பட அறுவர் பலி

2 mins read
7a56351c-372c-4f02-92c6-b1078ee2bf8c
மழையால் ஏற்படும் பேரிடரை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினர் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார்நிலையில் உள்ளனர். அதேபோல், அனைத்து மாவட்டங்களி லும் நீச்சல் வீரா்களைக் கொண்ட குழு, கயிறு மூலம் மீட்புப் பணியை மேற்கொள்ளும் குழு என இரு கமாண்டோ படையினர் பேரிடரை சமாளிக்க முழுவீச்சில் தயாராக உள்ளனர். படம்: ஊடகம் -

சேலம்: தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ள­தால், பெரும்­பா­லான மாவட்­டங்­க­ளி­லும் பர­வ­லாக கன­மழை பெய்து வரு­கிறது. இத­னால் ஒரு சில இடங்­களில் வெள்­ளப்­பெ­ருக்­கி­னால் மக்­கள் கடும் பாதிப்­புக்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

திரு­நெல்­வேலி மாவட்­டம், களக்­காடு அருகே வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்டு கர்ப்­பி­ணிப் பெண் ஒரு­வரும் மேலும் ஐவரும் வெள்­ளத்­தில் சிக்கி இறந்­துள்­ள­தா­க­ தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

வெள்­ளம் சூழ்ந்­துள்ள குடி­ யி­ருப்­புப் பகு­தி­களில் சிக்கித் தவிப் பவர்களைப் பாது­காப்­பாக மீட்க ரப்பா், மோட்டாா் பட­கு­கள், குடி­யிருப்புகளைச் சூழ்ந்­துள்ள வெள்ள நீரை வெளி­யேற்ற நீர் இறைக்­கும் இயந்திரங்கள், மீட்­புப்­ப­ணிக்­கான கயிறுகள் உள்­ளிட்ட அனைத்து கருவிகளும் தயார்நிலை­யில் உள்­ள­தாக தமிழ்­நாடு தீய­ணைப்பு, மீட்­புப்­பணிகள் துறை­யின் இயக்­குநா் டிஜிபி கரன்­சின்கா தெரி­வித்­துள்­ளார்.

திருப்­பூ­ரில் கன­மழை கார­ண­மாக 100க்கும் அதி­க­மான வீடு­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­தது.

களக்­காடு பகு­தி­யில் நாங்கு நேரி­யான் கால்­வா­யில் ஏற்­பட்ட வெள்­ளத்­தில் சிக்கி சிதம்­ப­ர­பு­ரத்­தைச் சேர்ந்த முரு­கன் என்­ப­வ­ரின் மகள் லேகா, 23, உயி­ரி­ழந்­தார். ஒரு மரத்­தில் சிக்­கி­யி­ருந்த லேகா­வின் சட­லம் மீட்­கப்­பட்­டது. லேகா ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக இருந்­தார்.

இதே­போல், திருப்­பூர் மாவட்­டம் தாரா­பு­ரத்­தில் உள்ள அரசு ஐடி­ஐ­யில் படித்து வந்த தர­ணீஸ், சுரேந்­தர், வெங்­க­டேஷ், ஆபி­ர­காம் ஆகி யோரும் அமராவதி ஆற்­றில் குளித்­த­போது வெள்­ள­நீ­ரில் அடித்­துச்செல்­லப்­பட்டு இறந்­த­னர்.

விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்சி பகு­தி­யில் பெய்த கன­ம­ழை­யால் வராக நதி­யில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்ளதால், அங்­குள்ள 11 கிரா­மங்களுக்கு போக்­கு­வ­ரத்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, வெள்ள அபா­யம், மக்­களைப் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைப்­பது, உணவு வழங்­கு­வது குறித்து காணொளி வழி மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் முதல்­வர் ஆலோ­சித்­தார். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள சாகுபடிகளைக் கணக்­கெ­டுக்­கும் பணி­களை வேளாண் துறை­யி­னர் துவக்கி உள்­ள­னர்.