தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீர்நிலைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு; 2015 திரும்பாது; அதிகாரிகள் திட்டவட்டம்

2 mins read
559cfd62-79d1-4916-a0d6-35927d7cb4ff
-

சென்னை: வட­கி­ழக்குப் பரு­வ­மழை தொடர்ந்து நீடிக்­கும் என்று முன்னு­ரைக்­கப்­பட்டு இருக்­கிறது.

குறிப்­பாக சென்னை பெரி­தும் பாதிக்­கப்­பட்டு வரு­கிறது. தலை­ந­கருக்கு குடி­நீர் வழங்­கும் ஏரி­களின் நீர்ப்­பி­டிப்புப் பகு­தி­களில் கடும் மழை தொடர்­வ­தால் பூண்டி, சோழ­வ­ரம் முத­லான ஏரி­கள் ஏறக்­கு­றைய நிரம்­பி­விட்­டன.

இருந்­தா­லும் சென்­னைக்கு 2015ல் ஏற்­பட்ட ஒரு நிலை மீண்டும் ஏற்­ப­டாது என்று அதி­கா­ரி­கள் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

மாநி­லம் முழு­வ­தும், குறிப்­பாக சென்னை பகு­தி­யில் நீர்­நி­லை­கள் அணுக்­க­மாக 24 மணி நேர­மும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதே இதற்­குக் கார­ணம் என்று அவர்­கள் கூறினர்.

நீர்­நி­லை­கள் நிரம்­பி­னால் பேரா­பத்து ஏற்­ப­ட­லாம் என்­ப­தால் பாது­காப்­பிற்­கா­க­வும் குடி­நீர் தேவை­களைக் கருத்­தில் கொண்­டும் ஏரி­களில் இருந்து நீர் வெளி­யேற்­றப்­பட்டு வரு­கிறது. அந்­தத் தண்­ணீர் சென்னை ஆறு­கள் மூலம் கட­லைச் சென்று சேர்­கிறது.

அடை­யாறு, கூவம், பக்­கிங்­காம் கால்­வாய்­களில் வெள்­ளம்போல் தண்­ணீர் போய்க்கொண்­டுள்­ளது.

தங்­கு­த­டை­யின்றி கட­லுக்கு நீர் செல்ல வேண்­டும் என்­ப­தற்­காக ராட்­சச இயந்­தி­ரங்­கள் மூலம் அடைப்­பு­கள் அவ­சர அவ­ச­ர­மாக அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

நீர்­நி­லை­களை அதி­கா­ரி­கள் 24 மணி நேர­மும் கண்­கா­ணித்து வரு­கி­றார்­கள். ஆகை­யால் எவ்­வ­ள­வு­தான் மழை நீடித்­தா­லும் 2015ல் சென்னை நக­ரம் மிதந்­தது போன்ற ஒரு நிலை இப்­போது ஏற்­ப­டாது என்று அதி­கா­ரி­கள் திட்­ட­வட்­ட­மாக கூறு­கி­றார்­கள்.

கடந்த 2015ல் கடும் மழை பெய்­தது. நீர்­நி­லை­கள் ஒரே நேரத்­தில் திறந்­து­வி­டப்­பட்­டதால் சென்னை நக­ரம் வர­லாறு காணா வெள்­ளத்­தில் சிக்­கி­யது.

இருக்க இட­மின்றி, உடுக்க உடை­யின்றி, உண்ண உண­வின்றி பல நாட்­க­ளுக்குச் சென்னை மக்­கள் அவ­திப்­பட்ட வேளை­யில், மின்­சா­ர­மும் தடை­பட்­டு­விட்­டது. ஏரா­ள­மான பொருட்சே­தம் ஏற்­பட்­டது. மக்­கள் தரை­யைப் பார்ப்­பதற்கே பல நாட்­கள் காத்­தி­ருக்க வேண்­டிய சூழ்­நிலை இருந்­தது. அதே­போன்ற நிலை இப்­போது வராது என அதி­கா­ரி­கள் கூறினர்.

இதை உறுதிப்படுத்த முழுமூச்சாக 24 மணிநேரமும் பல்வேறு நடவடிக்கை களை அதிகாரிகள் எடுத்துவருவதாகவும் மிகவும் கவனமாக நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதாக வும் அவர்கள் தெரிவித்தனர்.