சென்னை: தமிழகத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளும் அதிகரித்து வருவதாகவும் இந்தக் குற்றங்கள் குறித்த விசாரணையைத் துரிதப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல்துறையின ருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட 148 குழந்தைகளுக்கு இதுவரை ரூ.2 கோடி நிதி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இழப்பீடுகளைத் துரிதமாக வழங்கவும் முதல்வா் கூறியுள்ளார்.
"ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 என்ற சிறாா் உதவி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
"பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, உடனடி சிகிச்சைகள் வழங்கவேண்டும்," என முதல்வா் அறிவுறுத்தி உள்ளார்.