மகன் ஆசைக்காக மருத்துவராகும் கனவை கைவிட்ட தந்தை

2 mins read
61ceda00-b278-4191-bb3c-bb69ed2eaf7e
-

தர்ம­புரி: 'கல்வி கற்க வயது ஒரு தடை­யல்ல' என்­பதை நிரூ­பித்துள்­ளார் தர்­ம­பு­ரி­யைச் சேர்ந்­தவரான கே.சிவப்­பி­ர­கா­சம், 61. ஆசிரி­ய­ரா­கப் பணி­யாற்றி ஓய்வுபெற்­ற­ இவர், நீட் தேர்­வில் அதிக மதிப்­பெண்­களு­டன் தேர்ச்சி பெற்றதால், சென்னை, ஓமந்­தூ­ரார் மருத்­து­வக் கல்­லூ­ரியில் நடக்கும் மருத்­துவக் கலந்­தாய்­வில் கலந்துகொள்வதற் காக நேற்று வந்­தி­ருந்­தார்.

அர­சுப் பள்ளி மாண­வா்­க­ளுக்கு மருத்­து­வப் படிப்­பில் சேர 7.5% உள் ஒதுக்­கீட்­டின் கீழ் 437 இடங்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அந்த தரவரி­சைப் பட்­டி­ய­லில் கே.சிவப்­பிரகாசம் 349வது இடத்­தைப் பிடித்­துள்ளார்.

இருப்­பி­னும் கலந்­தாய்­வில் பங்­கேற்­பதா, வேண்­டாமா என்ற குழப்­பத்­து­டன் இரட்டை மன­நிலையில் இருப்­ப­தாகவும் அவர் சொன்னார். இதற்­குக் கார­ணம் தனது மகன் என்­றும் அவர் கூறி­னார்.

இது தொடா்பாக சிவப்­பி­ர­கா­சம் கூறு­கை­யில், "கன்­னி­யா­கு­மரி அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் பயிற்சி மருத்­து­வ­ராக உள்ள எனது மகன், இந்த வய­தில் நான் மருத்­து­வம் படிப்­பதை விரும்பவில்லை. என்னை கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்­டாம் என அறி­வுறுத்­தி உள்ளார். ஏனெ­னில், எனது இந்த 61 வய­தில் நான் மருத்­து­வம் படித்து முடித்து அதி­க­பட்­ச­மாக 15 ஆண்­டு­கள் வரை­தான் என்­னால் சேவை­யாற்ற வாய்ப்­புள்­ளது. நான் கலந்­தாய்­வில் பங்­கேற்­கா­விட்­டால் அந்த இடம் ஒரு இளம் மாண­வ­ருக்கு கிடைக்­கும். அதன்மூலம் அவா் 40 முதல் 50 ஆண்­டு­கள் வரை மருத்­து­வச் சேவை­யாற்ற முடி­யும் என எனது மகன் கூறினார்.

"ஒரு மாண­வ­ருக்கு என்­னால் வாய்ப்பு பறி­போ­கக்கூடாது என்­பது என் மக­னின் கருத்து," என்­றார் சிவப்­பி­ர­கா­சம்.

எனி­னும், கலந்­தாய்­வுக்கு எனது மாணவா் ஒரு­வ­ரு­டன் சென்­னைக்கு வந்­துள்­ளேன்.

"அதே­ச­ம­யத்­தில், ஒரு ஓய்வு பெற்ற ஆசி­ரி­ய­ராக, ஒரு மாண­ வ­னின் மருத்­துவ இடத்­தை­யும் நான் தட்­டிப் பறிக்க விரும்­ப­வில்லை. நான் கலந்­தாய்­வில் பங்­கேற்­கா­மல், ஓர் இளை­ஞ­ருக்கு அந்த வாய்ப்பு கிடைத்­த மகிழ்ச்­சி­யு­டன் வீட்­டுக்­குச் செல்­வேன்," என்­கி­றார் இவர்.

மனி­த­ரில் மாணிக்­கம் என்றும் மனிதநேயம் உயிரு டன்தான் உள்ளது என்றும் குரு என்­ப­வர் தெய்­வத்­துக்கு நிக­ரா­ன­வர் என்றும் மக்­கள் இவ­ரைப் பாராட்டி வரு­கின்­ற­னர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகள் எதற்கும் செல்லவில்லை. எனது பாடம் நடத்தும் அனுபவமே என்னைத் தேர்ச்சி பெற வைத்தது. மகனின் விருப்பப்படி எனது வாய்ப்பை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுப்பேன்.

கே.சிவப்­பி­ர­கா­சம்