தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடைத்தேர்தல்: வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

2 mins read
440f4a01-8280-4367-bce2-fe9a22753b7d
-

முதியவர்கள் மாற்றுத் திறனாளிகளிடம் இரண்டாவது நாளாக வாக்குச் சேகரிப்பு

ஈரோடு: இடைத்­தேர்­தல் நடை­பெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி­யில் அர­சி­யல் கட்­சித் தலை­வர்­களும் நிர்­வா­கி­களும் அனல் பறக்­கும் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

வீடு, வீடா­கச் சென்று வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள தொண்­டர்­கள் தங்­கள் கட்சி வெற்­றி­பெறு­வது உறுதி என கூறி வரு­கின்­ற­னர்.

இம்­முறை 77 சுயேச்சை­கள் போட்­டி­யி­டு­வ­தால், ஈரோடு கிழக்குத் தொகு­தி­யில் எங்கு பார்த்­தா­லும் வேட்­பா­ளர்­கள் வாக்குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­தைக் காண முடி­கிறது.

தேர்­த­லுக்கு இன்­னும் சில நாள்­களே உள்­ள­தால் தேர்­தல் களம் நாளுக்கு நாள் சூடு­பி­டித்து வரு­கிறது.

திமுக ஆத­ர­வு­டன் கள­மி­றங்­கி­யுள்ள காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வ­னுக்­குத் துணை­யாக இரு­ப­துக்கு மேற்­பட்ட அமைச்­சர்­கள் வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அதி­முக கூட்­ட­ணி­யைச் சேர்ந்த தலை­வர்­கள், நிர்­வாகி­களும் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

திமுக ஆட்­சிக்கு வந்து நடை­பெ­றும் முதல் இடைத்­தேர்­தல் என்­ப­தால் பெரும் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வேண்­டும் என்று கட்­சித் தலைமை உத்­த­ர­விட்­டுள்­ள­தால், திமு­க­வினர் வீடு, வீடா­கச் சென்று அரசு செயல்­ப­டுத்தி உள்ள பல்­வேறு நலத்­திட்­டங்­கள் குறித்து வாக்­கா­ளர்­க­ளி­டம் விவ­ரித்து வரு­கின்­ற­னர்.

இத்­தொ­கு­திக்­கான வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் ஐம்­ப­தா­யி­ரம் போலி வாக்­கா­ளர்­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அதி­முக தரப்­பில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் நீதி­மன்­றத்­தி­லும் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இடைத்­தேர்­தல் நேர்­மை­யான முறை­யில் நடத்­தப்­படும் என தேர்­தல் ஆணைய வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. எனி­னும், வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஆயி­ரக்­க­ணக்­கான வாக்­கா­ளர்­கள் கூடா­ரங்­களில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­முக குற்­றம்­சாட்டி உள்­ளது.

காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் அதி­முக வேட்­பா­ளர் தென்­ன­ரசு, தேமு­தி­க­வின் ஆனந்த், நாம் தமி­ழர் கட்­சி­யின் மேனகா நவ­நீ­தன் உள்­ளிட்­டோர் காலை முதல் இரவு வரை ஓய்­வின்றி தீவிர பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.