தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துபாய் குடியிருப்பு தீ விபத்து: மற்றவர்களைக் காப்பாற்றச் சென்று உயிர்நீத்த தமிழர்கள்

2 mins read
2ec3979d-ba20-4a33-b43b-28715ce8e261
-

சென்னை: துபா­யில் அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­பில் ஏற்­பட்ட தீ விபத்­தின்­போது அங்கு இருப்­ப­வர்­க­ளைக் காப்­பாற்ற முயன்­ற­தமி­ழ­கத்­தைச் சேர்ந்த இரு­வர் பலி­யா­னது தெரி­ய­வந்­துள்ளது.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அக்­கு­டி­யி­ருப்­பின் நான்­கா­வது தளத்­தில் இந்தத் தீ விபத்து ஏற்­பட்­டது. இதில் 16 பேர் உயி­ரிழந்­தனர். அவர்­களில் நான்கு பேர் இந்­தி­யர்­கள் ஆவர்.

அவர்­களில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 43 வய­தான இமாம் காசிம் அப்­துல் காதர், 49 வய­தான ஹுடு சலி­ய­ குண்டு ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

பலி­யான மற்ற இரு­வ­ரும் கேர­ளா­வைச் சேர்ந்த ரிஜேஷ் (38 வயது), ஜெஷி (32 வயது) தம்­ப­தி­யர் ஆவர். இந்தத் தீ விபத்தில் நான்கு இந்தியர்களும் பலியானது தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

சனிக்­கி­ழ­மை­யன்று துபா­யில் உள்ள தம் இஸ்லாமிய நண்­பர்­களுக்­காக நோன்புத் துறப்பு நிகழ்­விற்கு ரிஜேஷ் தம்பதியர் ஏற்­பாடு செய்து வந்தனர்.

அப்போது ஏற்பட்ட திடீர் தீ விபத்­தில் இத்­தம்­ப­தி­ய­ரும் சிக்­கிக்கொண்­ட­னர். குடி­யி­ருப்­பில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் இரு­வ­ரும் தீயின் கோரப்­பி­டி­யில் சிக்கி உயி­ரி­ழந்­தனர்.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்த இமாம்­கா­சிம் அக்­கு­டி­யி­ருப்­பின் காவ­லராகப் பணி­யாற்றி வந்தார். ஹுடு சலிய குண்டு வண்ணம் பூசும் பணியைச் செய்து வந்தார்.

நான்­கா­வது மாடி­யில் தீ விபத்து ஏற்­பட்­ட­தும், இரு­வ­ரும் விரைந்து சென்று தீயில் சிக்­கி­ய­வர்­க­ளைக் காப்­பாற்ற முயன்­ற­னர்.

இரு­வ­ரது உத­வி­யால் பலர் உயிர் பிழைத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. எனி­னும் மற்­ற­வர்­க­ளைக் காப்­பாற்ற போரா­டிய இரு­வ­ரும் விபத்­துப் பகு­தி­யில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் போனது. இறு­தி­யில் இரு­வ­ரும் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

இருவரது குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.