கல்லூரி வளாகத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடி: பேராசிரியர் புகாரால் பரபரப்பு

1 mins read

காரைக்­கால்: காரைக்­கால் ஜவ­ஹர்­லால் நேரு வேளாண் கல்­லூரி வளா­கத்­தில் கஞ்சா செடி­கள் வளர்ந்­தி­ருந்­த­தாக எழுந்­துள்ள புகார் அப்­ப­கு­தி­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. எனி­னும் இது முற்­றி­லும் உண்­மைக்­குப் புறம்­பான தக­வல் என கல்­லூரி நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக புதுவை இந்­திய ஊழல் எதிர்ப்பு இயக்­கத்­தின் தலை­வ­ரும், இக்­கல்­லூ­ரி­யின் இணைப்­பே­ரா­சி­ரி­ய­ரு­மான எஸ்.ஆனந்த்­கு­மார் பெய­ரில் காரைக்­கால், திரு­நள்­ளாறு உள்­ளிட்ட சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் பல இடங்­களில் கல்­லூரி நிர்­வா­கத்­தைக் கண்­டித்து சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­பட்­டி­ருந்­தன

கல்லூரி வளா­கத்­தில் கஞ்சா செடி­கள் வளர்ந்­தி­ருந்­த­தா­க­வும் பின்­னர் கல்­லூரி நிர்­வா­கம் அவற்றை ரக­சி­ய­மாக அழித்து விட்­ட­தா­க­வும் அச்­சு­வ­ரொட்­டி­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மாண­வர்­கள் நலன் கருதி, சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­மல் உண்­மையை அர­சுக்குத் தெரி­விக்­கா­மல் கஞ்சா செடி­களை ரக­சி­ய­மாக அழித்­த­தற்­காக கல்­லூரி முதல்­வர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்," என்­றும் சுவ­ரொட்­டி­களில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கல்­லூரி முதல்­வர் புஷ்­ப­ராஜ், கல்­லூரி மாண­வர் விடுதி வளா­கத்­திலுள்ள குப்­பை­மேட்­டில் வித்­தி­யா­ச­மான 2 செடி­கள் வளர்ந்­துள்­ள­தாக மாண­வர்­களில் சிலர் பேரா­சி­ரி­யர்­க­ளி­டம் தக­வல் தெரி­வித்­த­தா­க­வும் உட­ன­டி­யாக அச்­செ­டி­கள் அழிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார். எனி­னும் அவை கஞ்சா செடி­களா என்­பது தெரி­யாது என்­றார் அவர்.