முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் சோதனை

நெல்லை: தமிழக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

திமுகவின் தேர்தல் பரப்புரையை தடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக ஆவுடையப்பபன் குற்றம்சாட்டி உள்ளார்.

தற்போது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார் ஆவுடையப்பன். அவருடைய அலுவலகம் மகாராஜா நகரில் உள்ளது. வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஆவுடையப்பன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, அவரது அலுவலகத்தில் வருமானவரித் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து திமுகவினர் அங்கு திரண்டனர். இரண்டு மணிநேர சோதனைக்குப் பின்னர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். அந்த அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றார் ஆவுடையப்பன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!