தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர் செயல்பாட்டுக் கண்காணிப்பை எளிமைப்படுத்தும் இலக்கு கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம்

1 mins read
513800e8-0522-450d-bbb4-f6911152ccc3
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் உட்பட உலகளாவிய நிறுவனங்களும் இந்தப் புதிய தளத்தைப் பயன்படுத்தி தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: ஊழியர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் பணியை எளிமைப்படுத்தும் இலக்கைப் புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம் கொண்டுள்ளது.

இந்தத் தளம் ‘செயல்பாட்டு முகவர்’ என்று அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் உட்பட உலகளாவிய நிறுவனங்களும் இந்தப் புதிய தளத்தைப் பயன்படுத்தி தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்.

இத்தளத்தை மனிதவள, நிதித் தளமான வொர்க்டே அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர் மதிப்புப் பணிகளில் கவனம் செலுத்த முதலாளிகளுக்கு இத்தளம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மறுஆய்வு செய்வது சவால்மிக்கது என்றும் அதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றும் வொர்க்டே நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பீட்டர் பைலிஸ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தார்.

எனவே, இத்தளம் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்