அரசியாருக்கு மரியாதை செலுத்தக் காத்திருந்த மக்களைச் சந்தித்த அரசர் சார்ல்ஸ், இளவரசர் வில்லியம்

1 mins read
6fdb44b5-8e58-44b8-a610-0cfe3d3471fd
-

லண்­டன்: மறைந்த எலி­ச­பெத் அர­சி­யா­ருக்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக நீண்ட நேர­மாக வரி­சை­யில் காத்­தி­ருந்­த­வர்­களை அர­சி­யா­ரின் மக­னும் பிரிட்­டி‌ஷ் அர­ச­ரு­மான மூன்­றாம் சார்ல்ஸ் சந்­தித்­தார்.

இள­வ­ர­சர் வில்லி­ய­மும் மக்களைச் சந்­தித்­துப் பேசி­, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இருப்­பி­னும், எலி­ச­பெத் அர­சி­யா­ரின் நல்­லு­ட­லுக்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக மக்­கள் கிட்டத்­தட்ட 24 மணி நேரம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று அதி­காரப்­பூர்வக் கண்­கா­ணிப்பு தக­வல் கூறு­கிறது.

வரி­சை­யில் காத்­தி­ருந்து மயக்­க­ம­டைந்து விழுந்த 435 பேருக்கு மருத்­துவ சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே, வரி­சை­யில் காத்­தி­ருந்த ஆட­வர் ஒரு­வர், அதி­லி­ருந்து விலகி, அர­சி­யா­ரின் நல்­லு­டல் வைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­திற்­குச் செல்ல முயன்­றது அங்­கி­ருந்­த­வர்­க­ளுக்கு அதிர்ச்சி அளித்­தது. பொதுச் சட்ட ஒழுங்­கின்கீழ் அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­ட­தாக லண்­டன் போலி­சார் கூறி­னர்.

அர­சி­யா­ரின் இறு­திச் சடங்கிற்கு முன்­ன­தாக அர­சர் மூன்­றாம் சார்ல்ஸ் காமன்­வெல்த் நாடு­க­ளின் பிர­த­மர்­க­ளைச் சந்­திக்­க­வுள்­

ளார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் உலக நாடுகளில் இருந்து 500 தலைவர்கள் கலந்துகொள்வார் கள் என்று எதிர்பார்க்கப்படுகி

றது.