நெகிழிக் குழல்களைக் கைவிடும் கனடா

டொரொன்டோ: கனடாவில் புதன்கிழமை (20 டிசம்பர்) முதல் உணவகங்கள் நெகிழிக் குழல்கள், நெகிழி உணவுப் பெட்டிகள், நெகிழிப் பைகள், நெகிழிக் கரண்டிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.

நெகிழிப் பொருள் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்யமுடியாது என்று அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், இத்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் கனடாவில் 2022ஆம் ஆண்டு அறிமுகமானது.

2030ஆம் ஆண்டுக்குள் நெகிழிக் கழிவை முற்றிலும் ஒழிப்பது கனடாவின் இலக்கு. அதன்படி கட்டங்கட்டமாக நெகிழிப் பொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் அறிமுகமானது.

ஆனால், இவ்வாண்டு நவம்பர் மாதம் அத்திட்டத்துக்கு இடையூறு வந்தது. எண்ணெய், ரசாயன நிறுவனங்கள் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து இத்தடை நியாயமற்றதென்றும் அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் கனடிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.

இருந்தாலும், அந்நாட்டு அரசாங்கம் தடையைச் செயல்படுத்தியிருக்கிறது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!