'சண்டை உரக்கப் பேசும்'

'சண்டை உரக்கப் பேசும்'

3 mins read

அதிக சம்­ப­ளம், அதிக பட வாய்ப்­பு­கள், நாய­கி­க­ளுக்­கான பட்­டி­ய­லில் முத­லி­டம் என எதற்­கும் தான் ஆசைப்­ப­ட­வில்லை என்­கி­றார் பிரி­யா­மணி.

நல்ல கதா­பாத்­தி­ரங்­களைத் தேர்வு செய்து நடிப்­பது மட்­டுமே தனது இலக்கு என்­கி­றார்.

அந்த வகை­யில் தற்­போது நடித்து வரும் 'கொட்­டே­ஷன் கேங்' படம் தனக்கு மிகுந்த மன­நி­றைவை அளித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் பிரியா. கார­ணம், இந்­தப் படத்­துக்­காக அந்த அள­வுக்கு மெனக்­கெட்­டுள்­ளா­ராம்.

"பொது­வாக உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களில் நடிப்­ப­து­தான் மிக­வும் சிர­மம் என்­பார்­கள். அதை நானும் ஏற்­றுக்­கொள்­வேன். அதே­ச­ம­யம் சண்­டைக் காட்­சி­களில் நடிப்­பது எளிது என்று யாரா­வது சொன்­னால் அவர்­கள் என்­னு­டைய முதல் எதிரி ஆகி­வி­டு­வார்­கள்," என்று சிரிக்­கி­றார் பிரி­யா­மணி.

கார­ணம், 'கொட்­டே­ஷன் கேங்' படத்­தில் நிறைய சண்­டைக் காட்­சி­களில் நடித்­துள்­ளா­ராம். அதற்­காக சிறப்­புப் பயிற்சி பெற்­றது, படப்­பி­டிப்­பின்­போது ஏற்­பட்ட காயங்­கள் ஆகி­ய­வற்றை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது என்­கி­றார்.

"இந்­தப் படத்­துக்­கான படப்­பி­டிப்பை கொரோனா நெருக்­க­டிக்கு முன்பே தொடங்­கி­விட்­டோம். ஆனால் பல­முறை படப்­பிடிப்பை ஒத்­திப்­போட வேண்டி­ இ­ருந்­தது. பிறகு படப்­பிடிப்பை தொடங்­கி­ய­போது பல காட்­சி­களை மீண்­டும் பட­மாக்க வேண்­டி­யி­ருந்­தது.

"இருப்­பி­னும் இத­னால் நாங்­கள் வருத்­தப்­ப­ட­வில்லை. கார­ணம், கொரோ­னா­வால் கிடைத்த நேரத்­தில் கதையை மேலும் கூர்­தீட்­டி­னார் இயக்­கு­நர். ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் மேலும் மெரு­கேற்ற முடிந்­தது.

"உதா­ர­ண­மாக எனது உட­லில் ஆங்­காங்கே பச்சை குத்­திக்­கொள்­வது எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு வலு சேர்க்­கும் என்­றேன். அதை இயக்­கு­நர் ஏற்றுக் கொண்­டார். இதை­ய­டுத்து எனது கழுத்து, கைகளில் பழங்­கு­டி­யின மக்­க­ளைக் குறிக்­கும் வகை­யில் பச்சை குத்­திக்­கொண்­டேன்.

"கதைப்­படி நான் கூலிக்­காக கொலை செய்­யும் பெண்­ணாக வரு­கி­றேன். எனது கதா­பாத்­தி­ரம் அதி­கம் பேசாது. அதே­ச­ம­யம் இரண்­டொரு வார்த்­தை­கள் பேசி­னா­லும் அது நச்­சென்று இருக்­கும். எனவே அந்த வார்த்­தை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க கதைக்­குழு அதி­கம் மெனக்­கெட்­டது.

"எனது உடல்­மொழி மிக­வும் வித்­தி­யா­ச­மாக இருக்­கும். படப்­பி­டிப்­பின்­போது நான் பேசும் சிறிய வச­னம், உடல்­மொழி உள்­ளிட்­டவை சரி­யாக அமைந்­தால் மட்­டுமே இயக்­கு­ந­ருக்கு மன­நி­றைவு ஏற்­படும். இல்­லை­யெ­னில் பல­முறை ஒரே காட்­சி­யைப் பட­மாக்­கு­வோம்.

"பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போ­தும்­கூட இதே நடை­மு­றை­யைத்­தான் பின்­பற்­றி­னோம். அத­னால் எனது கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­கள் மன­தில் நிச்­ச­யம் ஆதிக்­கம் செலுத்­தும்.

"இதற்கு முன்பு பல படங்­களில் சண்­டைக் காட்­சி­களில் நடித்­துள்­ளேன். ஆனால் இந்­தப் படம் அவற்­றில் இருந்து முற்­றி­லும் மாறு­பட்­டுள்­ளது. எனக்­கான முதல் சண்­டைக் காட்­சியை நண்­ப­கல் 12 மணிக்­குத் தொடங்கி மூன்று மணி நேரம் தொடர்ச்­சி­யா­கப் பட­மாக்­கி­னர்.

"அது நீள­மான சண்­டைக் காட்சி. யாரே­னும் ஒரு­வர் சிறு தவறு செய்­தா­லும், மொத்த காட்­சி­யை­யும் மீண்­டும் பட­மாக்க வேண்­டி­யி­ருக்­கும். பல மணி நேர உழைப்பு வீணா­கும்.

"முந்­தைய நாள் ஒத்­திகை பார்த்த பிறகே சண்­டைக்­காட்­சி­களை எடுத்­தோம். எல்­லாமே கச்­சி­த­மாக அமைந்­துள்­ளது.

"சில சம­யங்­களில் வார்த்­தை­க­ளை­விட, சண்­டை­க­ளின் சத்­தம் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். அதை இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள காட்­சி­கள் ரசி­கர்­க­ளுக்­குப் புரிய வைக்­கும்," என்­கி­றார் பிரியா மணி.

இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள சில வச­னங்­கள் அர­சி­யல் ரீதி­யாக சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டு­வதை மறுத்­துள்ள அவர், கதைக்­கும் காட்­சிக்­கும் பொருத்­த­மான வச­னங்­கள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ருமே படத்­தின் வெற்­றியை மட்­டுமே கவ­னத்­தில் கொண்டு உழைத்­துள்­ளோம். சண்­டைக் காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது, என்­னு­டன் நடித்த சில­ருக்கு நான் செய்த தவ­று­க­ளால் காயம் ஏற்­பட்­டது. ஆனால் யாருமே அதைப் பொருட்­ப­டுத்­த­வில்லை.

"தர­மான படைப்பு குறித்து யாரும் தவ­றான தக­வல்­க­ளைப் பரப்­பக்­கூ­டாது என்­பதே எனது வேண்­டு­கோள்," என்­கி­றார் பிரி­யா­மணி.

கொட்டேஷன் கேங் படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என விமர்சகர்கள் சிலர் இப்போதே கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் பிரியா படம் குறித்து மட்டுமே பேசுகிறார்.