விவாகரத்து பெற்ற பிறகும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் அமலா பால். தமிழ், தெலுங்கில் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் அமைந்து வருகின்றன. இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமலா. "நான் செய்துகொண்ட திருமணம் எனது விருப்பத்தைப் பொறுத்து நடந்தது. ஆனால் அது வெற்றிகரமான வாழ்க்கையாக அமையவில்லை. எனவே எனது மறுமணம் பற்றிய முடிவை எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன்," என்கிறார் அமலா பால். பெற்றோர் தேர்வு செய்யும் மணமகனை எந்தவித தயக்கமும் இன்றி திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிடுபவர், மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் மட்டும் தமக்கு இல்லை என்கிறார். அமலாவின் மனநிலையை அவரது பெற்றோரும் புரிந்து கொண்டுள் ளனராம். அதனால் பொறுமையாக வரன் தேடி வருவதாகத் தகவல்.
மறுமணத்துக்கு அவசரப்படாத அமலா பால்
1 mins read
-

