கலையரசன் நாயகனாகவும் ஜனனி ஐயர் நாயகியாகவும் நடிக்கும் படம் 'அதே கண்கள்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் ரோஹின் வெங்கடேசன். "இது புலனாய்வை மையமாக வைத்து உருவாகும் படம். ரசிகர்கள் ரசிக்கும் வகையில் திகில் காட்சிகளைப் படமாக்குகிறோம். ஜிப்ரானின் பின்னணி இசை அருமையாக அமைந்திருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமாக அவரது இசை கைகொடுக்கும். கலையரசன் வழக்கம்போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜனனிக்குப் பெயர் வாங்கித் தரும் படமாக இது அமையும். மொத்தத்தில் ரசிகர்களை இப்படம் கவரும் என்பது உறுதி," என்கிறார் ரோஹின்.
'அதே கண்கள்'
1 mins read
-

