நடிகர் வடிவேலுக்கு கௌரவ முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் அனைத்துலக ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் ஆணையம் வடிவேலுவுக்கு இந்தப் பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட ஒருசில காரணங்களால் திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார் வடிவேலு. இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், சிறந்த பொழுதுபோக்கு கலைஞர் என்ற அடிப்படையில் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அதை அளித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

