நம்​மைக் கெடுத்​துக்கொண்டிருக்​கிறது ஏஐ: கங்கை அமரன்

நம்​மைக் கெடுத்​துக்கொண்டிருக்​கிறது ஏஐ: கங்கை அமரன்

1 mins read
822bb067-c587-4ab4-bbec-6f3e021e3cc8
கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசை தொகுப்பு வெளி​யீட்டு விழாவில் கங்கை அமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். - படம்: இந்து தமிழ் திசை

இயக்​குநரும் பாடலாசிரியரு​மான கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசைத் தொகுப்பு வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்​றது.

இதை டிரம்ஸ் ஜெர்ரி என்​டர்​டெ​யின்மென்ட் சார்​பில் கிளாடி ஜெரால்டு தயாரித்​துள்​ளார்.

சகோ கணேசன் ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். சதா சுதர்​சனம் இசை அமைத்துள்ள இந்தத் தொகுப்பின் பாடல்​களை தவசீலிதன்ராஜ், பர்​ஹான் நவாஸ் ஆகியோர் பாடி​யுள்​ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், “முன்பெல்​லாம் ஒரு பாடலைத் தொடரலையாகப் பாடு​வோம். இப்​போது ஒவ்​வொரு வரி​யாகப் பாடுகிறோம். செயற்கை தொழில்​நுட்​பத்​தைத் பயன்படுத்திப் பாடு​கிறோம். அதற்கு நாம் எப்​படி நம்​மைப் பெரு​மைப்​படுத்​திக்கொள்வது, உண்​மை​யைச் சொல்ல வேண்​டுமென்​றால் ஏஐ தொழில்​நுட்​பம் நம்​மைக் கெடுத்துக்கொண்​டிருக்​கிறது. அதை நம்பி வேலை செய்தால் பிற்​காலத்​தில் மூளை வேலை செய்​யாது.

“ஒரு கருப்பொருளை ஏஐ​யிடம் கொடுத்து விட்​டால், அதுவே பாட்​டெழுதி விடு​கிறது. இதில் எப்​படி நம் பெயரைப் போட்​டுக் கொள்​வது. எதற்​குச் சொல்​கிறேன் என்​றால் வருங்​காலக் குழந்​தைகள் தன்னால் சிந்​திக்​கக் கற்​றுக் கொள்ள வேண்​டும், எழுதத் தெரிந்திருக்க வேண்​டும். வருங்​கால குழந்​தைகள் தன்​னிடம் இருக்​கின்ற சுயத்தை வெளி​யில் கொண்டுவர வேண்​டும் என்​பது என் மனமார்ந்த ஆசை,” என்​றார்.

குறிப்புச் சொற்கள்