சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
72வது தேசிய விருதுகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர்.கலைவண்ணனுக்கும் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக 2024ஆம் அண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
மேலும், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அப்படத்தில் நடித்த தனுசுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மகாராஜா’ திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது, அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்குச் சிறந்த துணை நடிகைக்கான விருதும் ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவின்கீழ் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ‘ப்ளூ’ குறும்படத்திற்காக டி.எஸ்.ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

