‘அல்புக்யூர்கியூ ரிகார்ட்ஸ்’ என்ற புதிய இசை ‘லேபில்’ ஒன்றைத் தொடங்கியுள்ளார் அனிருத்.
தாம் இசையமைக்கக்கூடிய திரைப்படங்கள், தனி இசைப் பாடல்களில் புதிய திறமைசாலிகளை, இந்த நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த இயலும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
மேலும் தனது படைப்பாக்கத்திலும் இந்த முயற்சி முக்கியமான மைல் கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முன்னர் பல தனி இசைப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
வளமான குரல்களையும் இந்தியக் கலாசார இசையையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் தனது நிறுவனத்தின் விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், தனது பாடல்கள் குறிப்பிட்ட சில பின்னணி இசைத் தொகுப்புகளுடன் அனிருத்தின் புதிய இசை நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இதையடுத்து திரையுலகத்தினர் பலர் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அனிருத் இசையதைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளது.
சிம்புவின் ‘அரசன்’, லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெய்லர்-2’, ஷாருக் கான் நடிக்கும் ‘கிங்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

