‘கொடி’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, மீண்டும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘அனிமல்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி மீண்டும் பெரும்பொருள் செலவில் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார்.
இதில் திரிஷாதான் வில்லியாம். பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. திரிஷாவின் நடிப்பைக் கண்டு மிரண்டு போனாராம் பிரபாஸ்.
தனது நட்பு வட்டத்திலும் அவர் இதுகுறித்து கூற, அதை அறிந்த திரிஷா மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளாராம்.