‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், படத்தயாரிப்பு அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாக தனுஷுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
விரைவில் இந்தப் புதுப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஏற்கெனவே மூன்று படங்களில் நடிப்பதாகவும் இரண்டு படங்களை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

