‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
அண்மையில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்தப்படியாக நடிகர் சிம்புவை வைத்து அஸ்வத் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், சில நாள்களுக்குமுன் சிம்பு படத்திற்குப் பின் தனுஷ் படத்தை அவர் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
அவற்றை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வத். அதில், “எனது அடுத்த படங்கள் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம். அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே உங்களுடன் பகிர்வேன்,” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.