இந்தியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் தன் மனத்தை மிகவும் பாதித்துள்ளதாக அதன் நாயகி கிரித்தி சனோன் தெரிவித்துள்ளார். இதனால் அப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் முறையாக தனுஷுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார் கிரித்தி சனோன். இது தொடர்பாக அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“என் திரைப்பயணத்தில் உடல், மன ரீதியாக அதிகம் பாதித்த படம் இது. எனது கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. அதனால் மனத்தளவில் பாதிப்பு ஏற்படுத்தியது.
“படப்பிடிப்பு முடிவடைந்து பல வாரங்களுக்குப் பிறகும் அப்பாத்திரத்தின் தாக்கம் என்னுள் நீடித்தது,” என்று கிரித்தி சனோன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இப்படம் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் ஓர் அசாதாரண நடிகர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
ஒரே சமயத்தில் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

