தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை ‘அலங்கு’ என்ற பெயரில் படமாக எடுத்து இருக்கிறார்கள்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவக் கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகளின் எச்சக் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவது தினசரி செய்தியாக வெளி வந்துகொண்டு இருக்கிறது. இந்தக் கழிவுகளால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

