‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிய வந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குவார் என படத்தின் தயாரிப்புத்தரப்பு அறிவித்தது. எனினும், பட வேலைகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
தற்போது படத்தின் பூசை மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.