நாகார்ஜுனா, தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா, தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 20ஆம் தேதி குபேரா படம் வெளியானது.
இவ்வாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
இப்படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழில் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. ஆனாலும் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது என்று நாகார்ஜுனா கூறியிருக்கிறார்.
“சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கடினம். இங்கு வெற்றியும் நடிப்பின் மீதான காதலும் கைகோத்து இருக்கின்றன. என்னைச் சுற்றி வெற்றியும் இருப்பது என் அதிர்ஷ்டம். கிட்டத்தட்ட 36 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தபோது நான் தோல்விகளைச் சந்தித்தேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால் பார்வையாளர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“நான் நடித்த, ‘சிவா’ (1990) வெளிவந்த போது, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் நான் வெற்றியை ருசித்தேன். கொரோனாவுக்கு பிறகு, எல்லாரும் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
“இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா படமாக ஆகிவிடாது. ஒரு பான் இந்தியா படத்தை உருவாக்க, அதிக திட்டமிடலும் சக்திவாய்ந்த திரைக்கதையும் தேவை,” என்று நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.