தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பு அனுபவம் குறித்து அண்மையில் நடந்த நேர்காணலில் அப்படத்தில் நாயகியாக நடித்த பார்வதி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான அவர், தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, உத்தம வில்லன்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
‘மரியான்’ படப்பிடிப்பின்போது தன்னை உடை மாற்ற அனுமதிக்கவில்லை என நேர்காணல் ஒன்றில் வருத்தத்துடன் அவர் கூறினார்.
“தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி அப்படத்தில் நடித்தேன். அது ஒரு காதல் காட்சி. எனக்கு அக்காட்சியில் நடிப்பதற்குத் தேவையான வசதிகளைக் கவனித்துக்கொள்ள அங்கு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில், உடை மாற்றுவதற்காக நான் என் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை,” எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
மேலும், அப்படப்பிடிப்புத் தளத்தில், தன்னையும் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும் அது தனக்கு கடினமாக இருந்ததாகவும் தனக்கு ஆதரவாக அங்குயாருமில்லையெனவும் பார்வதி குறிப்பிட்டார்.

