தென்கொரியாவின் சுற்றுலாத் துறைக்கான கெளரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.
இந்திய மற்றும் தென்கொரிய நாட்டு ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தென்கொரிய நாட்டுச் சுற்றுலாத்துறையின் கெளரவத் தூதராக பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக தென்கொரிய சுற்றுலா அமைப்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன், தற்போது கவின் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திலும், வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

