தெலுங்கில் பிரபாஸுடன் இணைந்து நடித்ததற்கு அந்தப் படத்தின் கதைதான் முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
தெலுங்கில் முதன்முதலாக பிரபாசுடன் இணைந்து ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். மாருதி இயக்கும் இப்படத்தில் நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோரும் நடிக்கின்றனர்.
பான் இந்தியா படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தில் நடித்ததற்கான காரணத்தை அவர் கூறுகையில், “பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகிக்கு குறைவான காட்சிகளே இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் நான் படம் முழுவதும் வருகிறேன்.
“மேலும், இதுவரை நான் நடித்திராத மர்மம் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படம் உருவாகி உள்ளது. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்கும் ஆர்வம் எனக்கு அதிகமானது. பிரம்மாண்மாக தயாராகும் படத்தில் இதுமாதிரியான வேடங்கள் எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும். அதனால்தான் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் ஏற்றுக்கொண்டேன்,’’ என்று கூறியுள்ளார்.