‘வாழை’ என்னுடைய கதை: எழுத்தாளர் சோ. தர்மன்

‘வாழை’ என்னுடைய கதை: எழுத்தாளர் சோ. தர்மன்

1 mins read
b0305d3a-9c8c-4cbf-914c-6dba376a6f95
படம்: - ஊடகம்

‘வாழை’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

திரைப்படமாக வந்ததால் வாழை கதை தற்போது கொண்டாடப்பட்டு வருவதாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு தர்மன் பதிவிட்டுள்ளார்.

வாழை தன்னை வாழ வைக்கவில்லை எனவும் உருக்கமாக அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

“வாழை திரைப்படத்தின் கதையைத் தான் ஏற்கெனவே சிறுகதையாக எழுதி விட்டேன். அதை படமாக எடுக்க யாரும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை,” எனத் திரு தர்மன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், “இப்போதுதான் சோ. தர்மனின் வாழை கதையைப் படித்தேன், நீங்களும் படியுங்கள் என்று மாரி செல்வராஜ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் சோ. தர்மன் எழுதிய வாழையடி கதையைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்