கதிர் நாயகனாகவும் ஸ்வப்னா மேனன் நாயகியாகவும் நடிக்கும் படம் 'ஒன்பதிலிருந்து பத்து வரை' (9 டு 10). "வாடகை கார் ஓட்டுநரான நாயகனும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான நாயகியும் ஒரு பயணத்தின்போது சந்திக்க நேர்கிறது. இருவரின் கருத்துகளும் முரண்படுகின்றன. ஒரு கட்டத்தில் நாயகிக்கு, நாயகன் தன் ரசிகன் என்பது தெரிய வர, அன்பாகப் பேசுகிறார். இதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நாயகன், நாயகிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான். இதை வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இது திகில் பயணமாக காட்சிப்படுத்தப்படுகிறது," என்கிறார் இயக்குநர் ஜெகன்.
'ஒன்பதிலிருந்து பத்து வரை'
1 mins read
-

