பிரியாமணிக்கு கெட்டிமேளம்

பிரியாமணிக்கு கெட்டிமேளம்

1 mins read
f15f9475-da99-4d4c-89ed-1f731db3ed54
-

'கண்களால் கைது செய்' படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ்ப் பட உலகில் பிரபலமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 'அது ஒரு கனாக்காலம்', 'மலைக்கோட்டை', 'தோட்டா', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆறுமுகம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ்ப் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. மூன்று கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலை யில் பிரியாமணி திருமணத் துக்குத் தயாராகிறார் என்றும் வீட் டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றும் தக வல்கள் பரவின. இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த முஸ்தபா என்பவ ருடன் பிரியா மணிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக் கடி சந்தித்தனர். ஜோடியாக பல விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.