"நாயகிகள் அழகாக இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார் கள். இதற்காக நடிகை களும் நடிக்கவந்த புதி தில் தங்களை அழகுபடுத் திக்கொள்ள அதிகம் மெனக் கெடுகிறார்கள். சில படங்களில் நடித்தபிறகு கவர்ச்சிக் குளத் தில் குதித்து விடுகின்றனர். இதற்காக குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சியின் எல்லையை மீறுகின்றனர். "அரைகுறை உடைகள், குட்டைப்பாவாடை அணிவது தான் அழகு; கவர்ச்சி என்று நினைப்பது தவறு. டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிவதிலும் அழகுள்ளது. சேலை அணிவது இன்னும் அழகு. நான் இவற்றை அணிந்துதான் இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நிலைத்துள்ளேன். ரசிகர்களின் நாடித்துடிப்பை சினிமாவுக்கு வந்தபோதே கண்டுபிடித்து விட்டேன். அந்த ரகசியம் தெரிந்ததால்தான் இவ்வளவு வருடத்துக்குப் பிறகும் கதாநாயகியாக நீடிக்கிறேன்," என்று கூறுகிறார் காஜல் அகர்வால்.
கவர்ச்சிக் குளத்தில் குதிப்பது நல்லதல்ல - காஜல் அகர்வால்
1 mins read
-

