பழனி மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 'வருத்தமில்லா வாலிபர் சங்கம்' சார்பில் சிறப்பு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை சினேகா, அவரது கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கள் குழந்தையுடன் வந்திருந்த அவர்கள், கலை நிகழ்ச்சிக்கு முன்னதாக பழனி மலைக் கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்றனர். தண்டாயுதபாணி சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்த அவர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். தங்கள் குழந்தை விகானை தங்கத் தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். போகர் சன்னதிக்கு சென்றும் தரிசித்தனர். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சினேகாவை பார்க்க முண்டியடித்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கத்தேர் இழுத்த சினேகா, பிரசன்னா
1 mins read
-

