கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும் முதன் முறையாக சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று காலை நடைபெற்றது. இந்தத் தமிழ்த் தலைப்பை இளையராஜாதான் சொன்னார் என சில தினங்களுக்கு முன்பே கமல்ஹாசன் தெரிவித்திருந் தார். தசாவதாரம் படத்தில் 9 கதாபாத்திரங்களில் நகைச் சுவைக் கதாபாத்திரமாக விளங் கிய பல்ராம் நாயுடு கதா பாத் திரம்தான் ஒரு முழுநீள படத்திற்குரிய கதாபாத்திரமாக இந்தப் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர் சங்க நிர்வாகக் குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜா, பிரபு உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு மே 16ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் புதிய படம் 'சபாஷ் நாயுடு'
1 mins read
-

