'என்னை அறிந்தால்' படத்திற் காக சிறந்த வில்லன் விருதை வென்ற அருண் விஜய் இது தனக்கு மறுபிரவேசம் என்றார். சில ஆண்டுகள் படமே இல்லா மல் இருந்ததையும் இந்தப் படமே பல எதிர்ப்புகளுக்கிடையே தனக்குக் கிடைத்ததையும் குறிப்பிட்ட அவர், இது தனக்கு புதிய தொடக்கம் எனக் கூறினார். சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு) விருதினைப் பெற்ற ஜெயம் ரவி, தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் உழைத் தால்தான் வாய்ப்புகள் கிடைக் கும் என்றார். இடையில் சில ஆண்டுகள் படம் இல்லாமல் இருந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதேபோல் சிறந்த இயக்குநர் விருது பெற்ற விக்னேஷ் சிவன் முதல் படம் அவ்வளவு பேசப் படாதபோது, இரண்டாவது படத்தைத் தயாரிக்க எவரும் முன்வரவில்லை என்றார். அக் காலகட்டத்தில் 'கிராபிக் டிசைன்' வரை பல வேலைகள் செய்ததாகக் கூறினர். அதே நேரத்தில் உண்மையான ஆர்வமும் உழைப்பும் இருந்தால் சினிமாவில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று உறுதிபடக் கூறினார் விக்னேஷ் சிவன்.
'படமில்லாமல் இருந்த காலங்கள்'
1 mins read
-

